சென்னையில் அனைத்து தனியார் பள்ளிக்கும் நாளை கட்டாய விடுமுறை..

சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாளை மிலாது நபி என்பதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

ஆனால் சில தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடாமல் இயங்குவதால் இந்த அறிவிப்பை சென்னை ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கனமழை பெய்து வருகின்றது. நாளையும் இந்த மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதே போல் கஜா புயல் பாதிப்பால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மீட்பு பணி செய்வதற்காக பள்ளி, கல்லூரிகளுக்கு சில தினங்களாக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

நாளை மிலாது நபி என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.