சென்னையில் இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை..

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி. 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த தடை விதிக்கப்பட்டது