சென்னையில் விடியவிடிய தொடர் மழை..

சென்னை மற்றும் திருவள்ளூரில் பரவலாக மழை பெய்துள்ளது.

சென்னையில் கிண்டி, நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் இருந்து மழைப்பொழிவு காணப்பட்டது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழை காரணமாக சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.

ராயபுரம், காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.

திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் விடியவிடிய கனமழை பெய்தது. பொன்னேரியில் 13 சென்டி மீட்டரும், கும்மிடிப்பூண்டியில் 8 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

செங்குன்றம், பழவேற்காடு ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.