சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி மெகா ஊழல் : மு.க.ஸ்டாலின் அறிக்கை..

சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகராட்சி பணிகளில் ஆற்று மணலுக்குப் பதிலாக எம்-சாண்ட் பயன்படுத்தி ஊழல் நடைபெற்றுள்ளது.

மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் மீது லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்