சென்னையில் காலை முதல் சாரல் மழை.


சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராயநகர், மயிலாப்பூர், ராயப்பேட்டை , அடையார் , மடிப்பாக்கம் ,கோயம்பேடு,நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக குளுமையான வானிலை நிலவுவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.