சென்னை முகப்பேர் தனியார் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…

சென்னை முகப்பேரில், தனியார் கட்டிடத்தில் பற்றியெறிந்த தீயை, நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

முகப்பேரில், காதர்மொய்தீன் என்பவருக்குச் சொந்தமான, பேன்சி பெட்டிங் மார்ட் & பர்னிச்சர் என்ற பெயரில் படுக்கை விரிப்புகள், மெத்தைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகம் உள்ளது.

இங்கு, இரவு 7 மணியளவில் தீ விபத்து நேரிட்டது. காற்றின் வேகத்தில், ஒவ்வொரு தளமாகப் பரவிய தீ, கரும்புகையுடன் கொளுந்துவிட்டு எரிந்தது.

நிகழ்விடத்திற்கு, நான்கு தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள், கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.