சென்னை அருகே போலீசாராக நடித்து வழிப்பறி செய்த 5 பேர் கைது..


சென்னை அருகே போலீசாராக நடித்து வழிப்பறி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடுவஞ்சேரியில் ஆனந்தன், ஆறுமுகம், யஷ்வந்த், மணிகண்டன், மனோகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவர்களை மிரட்டி செல்போன் பறித்த போது 5 பேரும் பிடிப்பட்டனர்.