சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் : நிதின் கட்கரி உறுதி

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு கூறியது.

இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டிருந்தால், அவற்றை 8 வாரத்துக்குள் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது என்ற கோரிக்கை வலுக்கிறது.

இந்நிலையில் சேலம்-சென்னை 8 வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியாக கூறியுள்ளார்.
சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி,
விவசாயிகளுடன் பேசி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும் பேசுகையில், கோதாவரியில் இருந்து உபரி நீர் வீணாக கடலில் கலப்பதாகவும், அதனை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்ல 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பாஜக ஆட்சி அமைத்தவுடன் இந்த திட்டம் முதலில் தொடங்கப்படும் எனவும், இதன் மூலம் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.