சென்னையில் நாளை முதல் குழந்தைகளுக்கு “வைட்டமின் ஏ” சொட்டு மருந்து முகாம்..


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை “வைட்டமின் ஏ” சொட்டு மருந்து போடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்த முகாம் காலை 8மணி முதல் மதியம் 3வரை நடைபெற உள்ளது.

பெற்றோர்களே இந்த வாய்ப்பை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கட்டாயம் “வைட்டமின் ஏ” சொட்டு மருந்து கொடுக்கத் தவறாதீர்கள்.