சென்னை-தூத்துக்குடி இடையே 13,200 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச்சாலை: மத்திய அரசு தகவல்

மத்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக ‘பாரத் மாலா திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எட்டு வழி சாலை அமைக்கப்பட்டால் சென்னை-தூத்துக்குடி இடையிலான பயண தூரம் 100 கிலோமீட்டர் வரை குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து விழுப்புரம் வரை 10 வழி சாலை திட்டமாகவும், விழுப்புரத்திலிருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழி சாலை திட்டமாகவும்,

தஞ்சாவூர், திருச்சியிலிருந்து தூத்துக்குடி வரை 6 வழி சாலை திட்டமாகவும் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக ரூ.13,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது இந்த திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதால்,

புதிய பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, மத்திய சுற்றுச்சூழல் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் சென்னை-சேலம் இடையிலான 8 பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மற்றொரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.