சேப்பாக்கம் மைதானத்தினுள் பொங்கிய ரசிகர்கள் : வீரர்கள் மீது காலணி வீச்சு..


காவிரி போராட்டம் நடைபெறும் இந்த வேளையில் ஐபிஎல் போட்டிகள் வேண்டாம் என தமிழக கட்சிகள் இயக்கங்கள் கோரிக்கை விடுத்தன கோரிக்கைகளை புறந்தள்ளியது ஐபிஎல் நிர்வாகம்.மைதானத்தை சுற்றி கடுமையான போராட்டம் நடைபெற்றது. மைதானத்திற்க்குள் செல்லும் ரசிகர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஐபில் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்களை நோக்கி காலணிகளை வீசிய 5 -ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர்.