சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா: இலங்கை தமிழர்களுக்கு அனுமதி..


புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க இலங்கை தமிழர்களுக்கு வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.

சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா நடராஜர் கோயிலில் டிசம்பர் 24 முதல் ஜனவரி 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை தமிழர்கள் காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கப்பல்மூலம் தமிழகத்திற்கு வந்து ஆருத்ரா தேர் தரிசன விழாக்களை கண்டுகளிக்க வெளியுறவுத்துறை அனுமதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.