ப.சிதம்பரத்தை செப்.19-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு..

முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறப்பு நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லி திகார் சிறைக்கு ப.சிதம்பரம் அழைத்து செல்லப்படுகிறார்.