ப.சிதம்பரம் குடும்பம் ஆக.,20 ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு..


வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக வருமானவரித்துறை தொடர்ந்த வழக்கில் ஆகஸ்ட் 20 ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், மகன் கார்த்தி, மருமகள் ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோருக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது.

மூன்று பேரும் இன்று ஆஜராக ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆஜராக ஒருநாள் விலக்கு கேட்டு 3 பேரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் ஆக., 20 ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.