நெல்லை கண்ணன் என்ன தீய செயலை செய்தார்?: ப.சிதம்பரம் கருத்து

என்ன தீய செயலை அவர் செய்தார் என்று பேச்சாளர் நெல்லை கண்ணனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருது தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளியன்று இரவு பதிவிட்டுள்ளதாவது:

பேசினாலே குற்றம் என்று புதுமையான சட்ட நெறிகள் புகுத்தப்படுகின்றன. பேசுவதே குற்றம் என்று வைத்துக்கொண்டாலும், அதற்கு ஏன் 14 நாள் விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க வேண்டும்?

இப்படி நினைப்பவர்களை லண்டன் மாநகர் ஹைட் பார்க் (Hyde Park) என்ற பூங்காவிற்கு அனுப்ப வேண்டும். அங்கே பேசப்படுவதை அவர்கள் கேட்க வேண்டும்

பேச்சும் செயலும் இணைந்தால் தான் குற்றம். நெல்லை கண்ணன் பேசினார் என்று வைத்துக்கொள்வோம், என்ன தீய செயலை அவர் செய்தார்?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.