தலைமை நீதிபதிக்கு எதிரான மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி..


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக பல நீதிபதிகள் குற்றம் சாட்டினர். இதனைத் தொடர்ந்து காங்., உட்பட எதிர்கட்சிகள் துணை குடியரசுத் தலைவரிடம் மாநிலங்களவையில் விவாதிக்க மனுக் கொடுத்தனர். துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அந்த மனுவை தள்ளுபடி செய்தார். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு தொடர்ந்து எதிர்கட்சிகள். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வழக்கில் வாதாடி கபில் சிபில் வழக்கை வாபஸ் பெறுவதாகக் கூறியதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.