ஆழ்துளைகிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் முயற்சிகள் தீவிரம்.

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது.

மதுரையசை் சேர்ந்த மணிகண்டன் தனது குழுவினருடன் குழந்தையை மீட்க போராடி வருகிறார்.

குழந்தையின் ஒரு கையில் கயிறு கட்டப்பட்டுவிட்டது,ஆனால் மறு கையில் கயிறு கட்ட முடியவில்லை

30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை பிரத்யேக கருவி மூலம் மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையை மீட்கும் பணியில் மீண்டும் ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணி தொடக்கப்பட்டுள்ளது.