குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் : அனைத்து மாநில அரசுகளும் விளக்கமளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..


குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி, குழந்தை திருமணம் தடுப்புச்சட்டத்தை முறையாக அமல்படுத்தாதது குறித்து அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.