ஓடும் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: மூவர் கைது…

ஓடும் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓடும் பேருந்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அரைச்சலூரைச் சேர்ந்த 13 வயது மாணவி தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர், பள்ளிக்கு தினமும் வேனில் சென்றுவந்துள்ளார்.

வேன் டிரைவர், பேஸ்புக் மூலம் சிறுமியுடன் பழகியுள்ளார். இந்நிலையில் அந்த வேன் டிரைவர், கடந்த 22ம் தேதி, சிறுமியை ஏமாற்றிக் கூட்டிச் சென்றுள்ளார்.

தனியார் சொகுசுப் பேருந்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வேன் டிரைவரை கைது செய்துள்ளனர்.

தவிர, அவருக்கு உதவிய அவரின் இரு நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.