கிறிஸ்துமஸ் திருநாள் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து..

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த நாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டும்.

அன்பு வழியை மக்கள் அனைவரும் பின்பற்றி வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.