முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்..

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா, தளர்த்துவதா என்பது பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது