முதல்வர் காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையை காப்பாற்ற முயற்சிப்பது வெளிப்படையாக தெரிகிறது என்று திமுக கனிமொழி தெரிவித்துள்ளார்.
தந்தை-மகன் மரண விவகாரத்தில் கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என எப்படி நம்புவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது டிவிட் பதிவில்
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் மூச்சுத்திணறலாலும், உடல்நலக் குறைவாலும் உயிரிழந்தனர் என்று முதல்வர் கூறினார்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார். இந்த..அரசிடமிருந்து,

கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்? முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறையை காப்பாற்றுவதற்கு முயற்சிப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.