கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்..


கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்த முயல்வதாக ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கூட்டுறவின் அடிப்படை நோக்கத்தையே தகர்க்கக்கூடிய வகையில் தேர்தலை நடத்துவதற்கு அரசு பல திட்டங்கள் தீட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் கூட்டுறவு சங்க தேர்தலை மாநில அரசு ஜனநாயக முறைப்படி நடத்திட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.