கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவி கைது


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 5 மணி நேர கண்ணாமூச்சி போராட்டத்துக்குபின் வீட்டின் பூட்டை உடைத்து நிர்மலாதேவியை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பிரிவுகளின் கீழ் நிர்மலாதேவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.