வரும் தேர்தல்களில் மீண்டும் வாக்குச்சீட்டு முறை : காங்., கோரிக்கை…..


தேர்தல் சீர்திருத்தங்கள் அனைத்துக் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை தொடங்கியது..

மக்களவை மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தில், தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.