கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்., உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்..

கர்நாடகா அரசிடம் பேசி காவிரியில் தண்ணீர் தர காங்கிரஸ் உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி பேசியதற்கு பதிலளித்த முதல்வர், காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடகா அரசு மறுப்பதாக தெரிவித்துள்ளார்.