காங்கிரசில் சேருகிறார் சத்ருகன் சின்ஹா : பட்னா சாகிப் தொகுதியில் மீண்டும் போட்டி..

சத்ருகன் சின்ஹா 28-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். பட்னா சாகிப் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

30 வருடங்களாக பாரதிய ஜனதாவில் இருந்துவந்த சத்ருகன் சின்ஹா, பீகார் மாநிலத்தில் உள்ள பட்னா சாகிப் தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றிபெற்று எம்.பி.யாக இருந்தார்.

இதற்கிடையே அவருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே திடீர் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷாவை பல்வேறு விவகாரங்களில் கடுமையாக விமர்சனம் செய்தார்.

கொல்கத்தாவில் நடந்த எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்திலும் கலந்துகொண்டு பேசினார். ஹோலி பண்டிகையின் போதும் பிரதமர் மோடி தன்னைத்தானே காவலாளி என கூறியதையும் விமர்சனம் செய்தார்.