‘லாலி பாப் அரசியல்’ செய்யும் காங்கிரஸ்: மோடி சாடல்..

காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடக்கிறது. மே 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவு வெளியாக உள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்வதற்கு முன், அக்கட்சியின் வேட்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார். அப்போது அவர் பேசியவற்றின் முக்கிய அம்சங்கள்,

கட்சிகள் வளர்ச்சியைக் கொண்டுவரதற்கான விவாதங்களுக்கு முன்வர அஞ்சுகின்றன. சாதி அரசியல் செய்பவர்களுக்கு நாட்டின் வளர்ச்சி என்பது தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு போலியான வாக்குறுதிகளை லாலி பாப் போல வழங்குவதுதான். அவர்கள் அடுத்த தேர்தல் வந்துவிட்டால் வேறொரு சமுதாயத்திடம் சென்றுவிடுவார்கள்.

கடந்த சில தேர்தல்களை கவனித்தால், சில அரசியல் கட்சிகள் மதம் சார்ந்து மக்களை பிளவுபடுத்துவதைப் பார்க்கலாம். தேர்தலின் போது சில சமூகத்தினரின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு ஆதாயம் அடைகிறார்கள். பின் அந்த மக்களை மறந்துவிடுகிறார்கள்.