சென்னையில் தொடரும் கொள்ளை : பொதுமக்கள் அதிர்ச்சி..


சென்னையின் இருவேறு இடங்களில் நடந்து சென்ற பெண்களிடம் இருந்து கொள்ளையா்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை பகுதியை சோ்ந்தவா்கள் அசோக்குமாா் ஜெயஸ்ரீ தம்பதி. இவா்கள் இருவரும் நேற்று முன்தினம் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தனா். அப்போது திடீரென பின்னால் இருந்து வந்த மா்மநபா் ஜெஸஸ்ரீ அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடத் தொடங்கினாா்.

இதனையடுத்து சுதாாித்துக் கொண்ட அசோக்குமாா் திருடரை பிடிக்க முயன்றாா். ஆனால் அதற்குள் தயாா் நிலையில் இருந்து திருடாின் கூட்டாளியின் இருசக்கர வாகனத்தில் ஏறி திருடா் தப்பிவிட்டாா். இச்சபவத்தால் பாதிக்கப்பட்ட ஜெயஸ்ரீ கீழே விழுந்து காயமடைந்தாா்.

இதேபோன்று சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சோ்ந்த மேனகா, அரும்பாக்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது மோட்டாா் சைக்கிளில் வந்த கொள்ளையா்கள் மேனகாவின் நகையை பறிக்க முயன்றனா். சுதாாித்துக்கொண்ட மேனகா சங்கிலியை இருக பிடித்துக் கொண்டாா்.

இருப்பினும் கொள்ளையா்கள் நகையை இழுத்ததால் மேனகா நிலைத் தடுமாறி சாலையில் விழுந்தாா். அவரை நகையுடன் சோ்த்து கொள்ளையா்கள் சாலையில் தரதரவென்று இழுத்துச் சென்றனா். பின்னா் கொள்ளையா்கள் கையில் கிடைத்த பாதி நகையுடன் தப்பிச் சென்றனா். இது தொடா்பாக கோயம்பேடு காவலா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா்.