நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு : அதிர்ச்சியில் பொதுமக்கள்..

நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 41காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன.