தொடர்மழை : சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தொடர்மழை காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் கன மழை பெய்து வரும் மாவட்டங்களில் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.