கரோனா எதிரொலி : டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு..

கரோனாவின் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டி முதல் உள்ளுர் ஐபிஎல் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டன.
ஆஸ்திரேலியாவில் ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 2020 அக்டோபர்-18 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெறயிருந்தது. இந்நிலையில் இந்த போட்டிகள் 2022-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விளையாட்டு வீரர்களின் நலன் கருதி டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.