தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது..

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது. தமிழகத்தில் மேலும் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,721-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,385-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2082 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,689-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கரோனாவால் 64 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,385-ஆக அதிகரித்துள்ளது.