கரோனா தொற்று அதிகரிப்பு : திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடல்

திருவண்ணாமலை மாவட்டம் சென்னை திருவள்ளுர்,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டமாக இருந்து வருகிறது..
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று முதல் 10 நாட்களுக்கு அனைத்து கடைகளும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மருந்தகங்கள், ஓட்டல், பால் உள்ளிட்ட கடைகள் மட்டுமே இயங்கும் என வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.