கரோனாவின் கோரத்தாண்டவம் அக்டோபரில் தானாம்..…: தமிழகத்தை அதிர வைக்கும் ஆய்வு முடிவுகள்…!

சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் வரும் அக்டோபர் மாதம் உச்சத்தை தொடும் என்று டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றின் தாக்கம் உச்சக்கட்டத்தில் உள்ளது.

சென்னையில் தற்போது 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் அதிர வைக்கும் படியாக இருக்கிறது.

அதாவது அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவின்படி சென்னையில் கரோனா வைரஸ் அக்டோபர் மாதம் உச்சத்தை அடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி தமிழகத்தின் கரனோ வைரஸ் பாதிப்பு அடுத்த மாதம் 2.7 லட்சமாக உயரும் என்றும் அதில் 60% சென்னையை சேர்ந்தவர்கள் தான் இருப்பார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும் ஊரடங்கு நடவடிக்கைகளினால், கரோனாவின் உச்சநிலையை குறைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அந்த ஆராய்ச்சி முடிவில் கூறப்பட்டு உள்ளது.