கரோனா வதந்தி பரப்பியதாக சித்த வைத்தியர் திருதணிகாசலம் கைது..

கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை மனித சமுதாயம் கண்டுவருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தின் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கரோனா குறித்து வதந்தி பரப்பியதாக சித்த வைத்தியர் திருதணிகாசலத்தை தமிழக காவல் துறை கைது செய்தது.

கரோனாவிற்கு மருந்து உள்ளதாகவும் கரோனா தொற்று உள்ளவர்கள் 5 பேருக்கு மருந்து கொடுக்க அனுமதித்தால் சில நாட்களில் குணப்படுத்துவேன் என சமூக வலைத் தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவுகள் வைரலாகி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

தணிகாசலத்தைின் மீது கரோனா குறித்து வதந்தி பரப்பவதாக தமிழக சுகாதாரத்துறை காவல் துறையில் புகார் அளித்திருந்தது.

இந்நிலையில் தணிகாசலம் மீது வழக்க பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.