தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்வு:

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 51-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 4,496 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,167-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 1291 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் ஒரு லட்சத்தை கடந்த 2-வது மாநிலமானது தமிழகம். தமிழகத்தில் கனோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இன்று 5,000 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை1,02,310-ஆக அதிகரித்துள்ளது.