கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் கண்டு பிடிப்பு..

கொரோனாவுக்கு உரிய தடுப்பு மருந்தை முதன் முதலாக இஸ்ரேல் கண்டு பிடித்து உள்ளது

இஸ்ரேலின் இஸ்ரேலிய பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் ஆன்டிபாடியை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இது கொரோனா தொற்றுநோய்க்கு சாத்தியமான சிகிச்சையை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி நப்தாலி பென்னட் பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு நேற்று சென்றார்,

அங்கு கொரோனா வைரஸுக்கு மருந்தைக் கண்டுபிடிப்பதில் அடைந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து அவருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த சாதனைக்காக ஆராய்ச்சியாளர்களைப் பாராட்டிய பென்னட் இந்த பயங்கர முன்னேற்றத்திற்கான நிறுவன ஊழியர்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்.

அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யூத மனம் இந்த அற்புதமான சாதனையை கொண்டு வந்தது என கூறினார்.

இது குறித்து பென்னட் அறிக்கையில் கூறி இருப்பதாவது;-

பாதுகாப்பு உயிரியல் ஆராய்ச்சிக்கான இஸ்ரேல் நிறுவனமான (ஐ.ஐ.பி.ஆர்)-ல் உருவாக்கப்பட்ட மோனோக்ளோனல் நியூட்ராலைசிங் ஆன்டிபாடி நோயாளிகளின் உடல்களுக்குள் நோயை உருவாக்கும் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என கூறி உள்ளார்.

ஆன்டிபாடி செய்முறை காப்புரிமை பெறுகிறது என்று ஐஐபிஆர் இயக்குனர் ஷ்முவேல் ஷாபிரா கூறினார்.

அதன் பிறகு சர்வதேச உற்பத்தியாளர் அதை பெருமளவில் உற்பத்தி செய்ய முற்படுவார் என தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய இரண்டு சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஒன்று இந்தியாவிலிருந்து, மற்றொன்று அமெரிக்காவிலிருந்து.

சிறிய தெற்கு நகரமான யெருஹாமில் இஸ்ரேலின் முதல் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை திறக்க பெரிய திட்டங்களை இஸ்ரேல் வகுத்துள்ளது

இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.ஐ.பி.ஆர்) மற்றும் இரண்டு வருங்கால சர்வதேச மருந்து நிறுவனங்களில் ஒன்றாகும் என்று யெருஹாம் உள்ளூராட்சி மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.