முதல் கரோனா தடுப்பு ஊசி மருந்து : ரஷ்யா ஒப்புதல்..

உலகையே அச்சுருத்தி வரும் கரோனா தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டறிய விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
முதல் கரோனா தடுப்பு ஊசி மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதற்கு ரஷ்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் மகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று உலகில் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பகல் இரவாக பாடுபட்டு வருகின்றன.

தற்போது, இதுவரை உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7.37 லட்சத்தை தாண்டியது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த 7,37,863 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கரோனாவால் 20,236,931 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 13,092,792 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 64,558 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

பரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பூசிக்கு ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததை அடுத்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை விரைவாக உருவாக்க ரஷ்யா தொடக்கத்தில் இருந்து முயற்சித்து வருகிறது.