நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டம் : முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார்..

கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு 77 ஆயிரம் பெண்களுக்கு நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை அறிவித்தது.

இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொருவருக்கும் 50 நாட்டு கோழிக்குஞ்சுகள் வழங்கப்படும்.

கோழிகளை பராமரிக்க ரூ2500 மதிப்புள்ள கோழிக் கூண்டும் வழங்கப்படுவதாக விழாவில் பேசிய முதல்வர் தெரிவித்தார்.