மாவோயிஸ்டுக்கு ரத்ததானம் செய்த மத்திய ரிசர்வ் படை வீரர்

ஜார்கண்டில் துப்பாக்கிச் சண்டையின் போது காயமடைந்த மாவோயிஸ்டு தீவிரவாதிக்கு, மத்திய ரிசர்வ் படை வீரரே ரத்தம் வழங்கிய உருக்கமான நிகழ்ச்சி அரங்கேறி உள்ளது.

ராஞ்சி அருகே மத்திய ரிசர்வ் படையினர் மாவோயிஸ்டுகளை சுற்றி வளைத்த போது, இருதரப்புக்கும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் காயமடைந்த மாவோயிஸ்ட் ஒருவரை ரிசர்வ் படையினர் ராஞ்சி ரிம்ஸ் (RIMS) மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய்ச் சேர்த்துள்ளனர். அப்போது, காயமடைந்த மாவோயிஸ்டின் உயிரைக் காப்பாற்ற மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த ராஜ்கமல் என்ற வீரர் ஒருவரே ரத்தம் வழங்கி உள்ளார். எதிரும், புதிருமாக மோதிக் கொள்ளும் நிலையிலும், மாவோயிஸ்ட் ஒருவருக்கு மத்திய ரிசர்வ் படை வீரரே ரத்தம் வழங்கி உயிரைக் காப்பாற்றி இருக்கும் மனிதாபிமான நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.