கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 பெண்கள் உட்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி..


கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 7 பெண்கள் உட்பட 9 பேர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். மேல்பாப்பானம்பட்டில் கழிவுநீரை குடியிருப்பு பகுதியில் விட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து அவர்கள் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். என்எல்சி ஊழியர் பூரநாயமூர்த்தி மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.