புயலால் பாதிக்கப்பட்டுள்ள கிராமத்தை தத்தெடுக்கிறார் நடிகர் விஷால்..

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின.

ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த நிவாரண நிதியை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள நடிகர் விஷால், தத்தெடுக்க உள்ள கிராமத்தை முன்மாதிரியான கிராமமாக உருவாக்குவேன் என்றும் கூறியுள்ளார்.