டிச., 31-ம் தேதி மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி…

2019 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

புத்தாண்டு பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், சென்னை உட்பட பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி உள்ளன.

இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டப்படும் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி, டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிமுதல் நள்ளிரவு 1 மணிவரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 1 மணியுடன் கேளிக்கை நிகழ்ச்சிகளை நிறுத்துவதுடன், மதுபானங்களையும் விற்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் மதுபானம் பரிமாறக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ள காவல்துறை,மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் தண்டனை வழங்கப்படும் என அறிவுறுத்தியுள்ளது.