டிச.,3-ந்தேதி மதிமுக-தி.க நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு..

வரும் டிசம்பர் 3-ந்தேதி மதிமுக -திக சார்பில் தமிழக ஆளுநர் மாளிகையின் முன்எழுவர் விடுதலை விவகாரத்தில் காலந்தாழ்த்திவரும் ஆளுநரின் செயலைக் கண்டித்து

நடத்தும் முற்றுகைப் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிக்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முன்னதாக போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு மதிமுக பொது செயலாளர் வைகோ கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.