தம்மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் எச்.ராஜா முறையீடு..

தம்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது பற்றி எச்.ராஜா முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி தஹில்ரமணி, துரைசாமி அமர்வு முன்பு எச்.ராஜா வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.

நீதிபதி சி.டி. செல்வம் தலைமையிலான அமர்வு தன்னிச்சையாக வழக்கு தொடர முடியாது எனவும் தலைமை நீதிபதிதான் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரமுடியும் என எச்.ராஜா முறையீடு செய்துள்ளார்.