டெல்லியில் மின்விசிறி தொழிற்சாலையில் வெடி விபத்து : 7 பேர் உயிரிழப்பு..

டெல்லி மோதி நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

சுதர்சன் பார்க்கில் செயல்பட்டு வரும் 2 மாடிகளைக் கொண்ட மின்விசிறி தயாரிப்பு ஆலையில், சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில், கட்டிடத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், இடிபாடுகளில் சிக்கியிருந்த 15க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.

கட்டிடத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பது குறித்து, தீவிர தேடல் பணி நடைபெற்று வருகிறது.