டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : இறுதிப் போட்டியில் சாய்னா..

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷியாவின் கிரேகோரியாவை எதிர்கொண்டார்.

இதில் 21-11, 21-12 என நேர்செட்களில் வென்ற சாய்னா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 12-21 எனத் மோசமான தோல்வியைத் தழுவினார்.

இதன் மூலம் தொடரிலிருந்தும் ஸ்ரீகாந்த் வெளியேறுகிறார். ஜப்பானின் மோமோடாவை எதிர்த்து 12வது முறை களமிறங்கியுள்ள அவர் 9 முறை தோல்வியைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 3 முறை மட்டுமே வென்றிருக்கிறார்..