ஆர்.கே.நகரில் டிடிவி ஆதரவாளர்கள் 5 பேர் கைது: ஆதரவாளர்கள் போராட்டம்..


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பரப்புரையில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது தெரியாமல் டிடிவி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.