தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி


ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி என்பவர், ‘தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றிபெற்றிருக்க முடியாது’ எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவுப் பிறப்பித்தது.